Friday 29 October 2010

வழியனுப்பிய கோபுரம்



எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனினும் திருவில்லிபுத்தூரின் கம்பீரமான கோபுரம் மனதிற்கு இன்றைக்கும் நெருக்கமானதாகவே உள்ளது. காரணம் 1976 வரை வாழ்ந்த ஊர் அது.

நான்காவது வரை படித்த நீராவி ஸ்கூல், தண்ணி இல்லாமல் பேட்மிண்டன் மைதானமாக மாறிப்போன சக்கரக் குளம், ஆண்டாள் கோவில் லாலா கடை. திருப்பாற்கடல் பிள்ளையார் கோயில், மடவார்வளாகம் சிவன் கோயில் குளம். சிவகிரி அரண்மனை, ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுத்த துளசி மாடம், ஒன்றரை மணி நேரத்தில் ரதவீதியை சுற்றி வந்துவிடும் செப்புத் தேர், 17 வருசமா ஓடாம இருந்த பெரிய தேர், பென்னிங்க்டன் நூலகம். மாடத் தெரு இந்து நடுநிலைப் பள்ளி, அபி மன்னன் பாத்திரக்கடை, நண்பனின் ஜோதி ஸ்டுடியோ, திருமுக்குளம், சி எம் எஸ் விளையாட்டு மைதானம். சின்ன அண்ணா மா. குருசாமி கல்லறை, சிவகாசி பஸ் நிற்கிற மாதா கோயில், வெங்கடேஸ்வரா தியேட்டர், பெரிய கண்மாய், மேலரத வீதியில் காமராஜர் திறந்து வைத்த ராவன்னா கீனா சிலை, உமையாள் விலாஸ் ஓட்டல், அப்போது ஊருக்கு வெளியே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜெய கிருஷ்ணா தியேட்டர், ஜெயராம் ட்ரான்ஸ்போர்ட், சிவப்புக் கலரில் ஓடிய
ஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் பஸ், வீட்டுக்கு எதிரே இருந்த பால் பண்ணை, பஸ் ஸ்டாண்ட் முக்கில் இருக்கிற பாலசுப்ரமணியவிலாஸ், கோவிந்தம் பிள்ளை கடை, கீழரத வீதியில் அண்ணா படங்களோடு இருந்த சலூன், காய்ச்சலுக்கு மிக்சர் கொடுத்த கம்பௌண்டர் ஆதி, இந்து ஐ ஸ்கூல் முன்பு கீறி கீறிக் கிடைக்கிற கருப்பட்டி அச்சு மிட்டாய், பெரியார்- ராஜாஜி-எம் ஜி சக்ரபாணி- மதியழகன் பேசிய தேரடித் திடல், சுருண்டு சுருண்டு பிரம்மாண்டமாய் கீழரத வீதியில் கிடந்த கைக்குள் அடங்காத பெரிய தேர் வடம், நண்பர்கள் ரமேஷ் பாபு, சீனிவாசன், ராதா சங்கர், சங்கர், மகேஸ்வரன் ....இப்படி நினைவலைகள் அலை மோதுகின்றன.

அந்த ஊரை விட்டு 1976 ஜூன் மாதம் வெளியேறியபோது பஸ் எல்லையைத் தாண்டிய பிறகும் திரும்பிப் பார்த்தபோது தெரிந்தது இந்த கோபுரம்தான்.

2 comments:

  1. நல்ல பதிவு.
    கோபுரத்திற்கு திருப்பணி செய்து, பெய்ன்ட் அடித்து அதன் கம்பீரத்தையே மாற்றி விட்டார்கள்.
    நன்றி.

    ReplyDelete
  2. எங்கிருந்தாலும் வாழ்க...

    ReplyDelete