Saturday 6 November 2010

சின்ன அண்ணா மா குருசாமி

இவர் திருவில்லிபுத்தூரின் நகர்மன்றத் தலைவராக மிகக் குறுகிய காலம் இருந்தார். அவருக்கு முன்னாள் காங்கிரஸ்தான் அப்பதவியில் நீண்ட காலம் இருந்து வந்திருந்தது.திரு பாலையா (அவரது பதிவேட்டு பெயர் வேறு என நினைக்கிறேன்) என்பவர் 18 ஆண்டுகளாக நகர்மன்றத் தலைவர் ஆக இருந்தார்.அவரும் மக்களிடம் மதிப்பைப் பெற்றவராகவே இருந்தார்.

பின்னர் தி மு க வின் சார்பில் சேர்மன் ஆக வந்தவர்தான் மா குருசாமி. குறுகிய காலத்தில் மக்களின் பேரன்பைப் பெற்றவராக திகழ்ந்தார். அவர் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக மறைந்து விட்டார். அன்னாரை இன்றைக்கு எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் எனத் தெரியாது. அவரின் சமாதி சிவகாசி ரோட்டில் இருக்கிறது.

பேரறிஞர் அண்ணா முதல்வராக கொஞ்ச காலம்தான் இருந்தார். இவரும் அப்படிதான். திருவில்லிபுத்தூர் நகரம் அவரை சின்ன அண்ணா என்று அழைத்தது.

No comments:

Post a Comment